ஒலிம்பிக்கில் பங்கேற்கும் இந்திய வீரர்களை ஊக்கப்படுத்தி பாடல் அமைத்த ஏ.ஆர் ரஹ்மான்

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க உள்ள இந்திய வீரர்களை ஊக்கப்படுத்துவதற்காக ஏ. ஆர் ரஹ்மான் இசையமைத்த அதிகாரப்பூர்வ பாடலை மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் வெளியிட்டுள்ளார்.

ஒலிம்பிக்கில் பங்கேற்கும் இந்திய வீரர்களை ஊக்கப்படுத்தி பாடல் அமைத்த ஏ.ஆர் ரஹ்மான்

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க உள்ள இந்திய வீரர்களை ஊக்கப்படுத்துவதற்காக ஏ. ஆர் ரஹ்மான் இசையமைத்த அதிகாரப்பூர்வ பாடலை மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் வெளியிட்டுள்ளார்.

ஜப்பானின் டோக்கியோ நகரில் ஜூலை 23-ம் தேதி தொடங்க இருக்கும் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க இந்தியா சார்பில் 126 வீரர் வீராங்கனைகள் டோக்கியோ செல்ல உள்ளனர். இந்த நிலையில் அவர்களை ஊக்கப்படுத்த ஏ. ஆர் ரஹ்மான் இசையமைத்த பாடலை மத்திய அமைச்சர்  அனுராக் தாக்கூர் காணொலி மூலம் வெளியிட்டார். கொரோனா நெருக்கடி காலத்தில் ஒன்றிணைந்து பணிபுரிவதற்கு ஊக்கப்படுத்தும் வகையில் உணர்ச்சி ததும்பும் படாலை ஏ. ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளதாகவும், இதனை அதிகளவில் பகிறுமாறும் கேட்டுக் கொண்டுள்ளார்.