வாரத்திற்கு ஒரு நாள் மதுபானம் இலவசம்! - விரைவில் அறிவிப்பு

தெலங்கானாவில் மதுபான விற்பனையை அதிகரிக்கும் வகையில், மதுப்பிரியர்களுக்கு மகிழ்ச்சியான அறிவிப்பு ஒன்றை அம்மாநில அரசு வெளியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வாரத்திற்கு ஒரு நாள் மதுபானம் இலவசம்! - விரைவில் அறிவிப்பு

தெலங்கானாவில் மதுபான விற்பனையை அதிகரிக்கும் வகையில், மதுப்பிரியர்களுக்கு மகிழ்ச்சியான அறிவிப்பு ஒன்றை அம்மாநில அரசு வெளியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலையின் கோரத்தாண்டவம் படிப்படியாக குறைந்து வருகிறது. இதனால், தெலங்கானாவில் மதுக்கடைகள் திறக்கப்பட்டாலும், அங்கு மது விற்பனையானது மந்தமாகவே உள்ளதாக கூறப்படுகிறது. இதனால், மதுபான விற்பனையை அதிகப்படுத்தும் விதமாக, உரிமம் பெற்ற மதுக்கடைகளில் வாரம் ஒரு நாள் இலவசமாக மது வழங்க அம்மாநில அரசு முடிவு எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும் கூறப்படுகிறது.