உறவினர்களை தனி உதவியாளர்களாக நியமித்தேனா...? மேற்குவங்க ஆளுநர் விளக்கம்

மேற்குவங்க ஆளுநர் தனது குடும்பத்தை சேர்ந்தவர்களை நியமித்துள்ளதாக எழுந்த குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.

உறவினர்களை தனி உதவியாளர்களாக நியமித்தேனா...? மேற்குவங்க ஆளுநர் விளக்கம்

மேற்குவங்க ஆளுநர் தனது குடும்பத்தை சேர்ந்த 6 பேரை தனிப்பட்ட உதவியாளராக நியமித்துள்ளதாக  திரிணாமுல் எம்.பி மஹூவா மொய்த்ரா குற்றஞ்சாட்டியிருக்கிறார்.

மேலும்  ஆளுநரின் வாரிசு அரசியலில் ஈடுபடுவதாக, மஹூவா மொய்த்ரா டுவிட்டரில் புதிய குற்றச்சாட்டினை வைத்திருந்தார்.

மேலும் முறைகேடாக நியமிக்கப்பட்ட அந்த  6 பேரையும் டெல்லிக்கு திருப்பி அனுப்ப  வேண்டும் எனவும் குறிப்பிட்டிருந்தார்.

இந்த ட்வீட் பதிவு வைரலான நிலையில், இதற்கு  மறுப்பு  தெரிவித்துள்ள மேற்கு வங்க  ஆளுநர் ஜெகதீப் தங்கார், தனி உதவியாளர்கள் 6 பேரும்  3 மாநிலங்களை சேர்ந்தவர்கள் மட்டுமல்லாது 4 வித சாதி பிரிவை சேர்ந்தவர்கள் என்றும் விளக்கமளித்துள்ளார்.