யோகி ஆதித்யநாத்தை புகழ்ந்து தள்ளிய மோடி... 

உத்தர பிரதேச தேர்தலில் பா.ஜ.க. வெற்றி பெற்றதற்கான அனைத்து புகழும் யோகி ஆதித்யநாத்துக்கே சேரும் என பிரதமர் மோடி தெரிவித்து உள்ளார்.

யோகி ஆதித்யநாத்தை புகழ்ந்து தள்ளிய மோடி... 
உத்தர பிரதேசத்தில் மாவட்ட பஞ்சாயத்து தலைவருக்கான தேர்தலில் 75 இடங்களில் 67 இடங்களை பா.ஜ.க. கைப்பற்றி உள்ளது.  இதுகுறித்து பேசிய அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், இதற்காக பா.ஜ.க. தொண்டர்களுக்கு நன்றியை தெரிவித்து கொள்வதாக குறிப்பிட்டுள்ளார். அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் அதிக வாக்கு வித்தியாசத்தில் பா.ஜ.க. வெற்றி பெறும் எனவும் அப்போது அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்..
 
இந்த தேர்தல் வெற்றி குறித்து பேசிய பிரதமர் மோடி செய்தியில், வளர்ச்சி, பொது சேவை மற்றும் சட்டத்தின் ஆட்சி ஆகியவற்றிற்கு பொதுமக்கள் அளித்த ஆசியே, உத்தர பிரதேச மாவட்ட பஞ்சாயத்து தலைவருக்கான தேர்தலில் பா.ஜ.க. அடைந்த இந்த வெற்றியாகும் என குறிப்பிட்டுள்ளார். இதற்கான புகழ் அனைத்தும் முதலமைச்சர்  யோகி ஆதித்யநாத்தின் கொள்கைகள் மற்றும் கட்சி தொண்டர்களின் அயராத கடின உழைப்பு ஆகியவற்றையே சாரும் எனவும்,  உத்தர பிரதேச அரசு மற்றும் பா.ஜ.க.வுக்கு எனது மனப்பூர்வ வாழ்த்துகளையும் பிரதமர் மோடி தெரிவித்து உள்ளார்.