ஃபர்ஸ்ட் புடிச்சது..இப்போ பிடிக்கல .... இளம்பெண்ணை ஏமாற்றிய நடிகை கங்கனா ரனாவத்தின் பாடிகார்ட்
இளம்பெண் ஒருவரை திருமணம் செய்து கொள்வதாக கூறி மோசடி செய்த விவகாரத்தில் பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத்தின் பாடிகார்ட் குமார் ஹெக்டே அதிரடியாக கைது.
மும்பையை சேர்ந்த இளம்பெண் ஒருவரை தான் பெரிய இடத்தில் வேலை பார்ப்பதாகவும், நிச்சயம் உன்னை திருமணம் செய்து கொள்வேன் என்றும் பல பொய்களை கூறி
குமார் ஹெக்டே குடும்பம் நடத்தி வந்ததாக கூறப்படுகிறது.
பின்பு அந்த பெண்ணிடம் இருந்து எஸ்கேப் ஆகியுள்ளார் குமார் ஹெக்டே. காதலன் எங்கே இருக்கிறார், என்ன செய்கிறார் என அறியாத பாதிக்கப்பட்ட பெண் மும்பை போலீசாரிடம் கண்ணீருடன் புகார் அளித்துள்ளார்.
இதனையடுத்து களத்தில் இறங்கிய மும்பை போலீசார் கர்நாடகாவில் உள்ள தனது சொந்த ஊரில் தங்கி இருந்த குமார் ஹெக்டேயை சுற்றிவளைத்து கைது செய்துள்ளனர்.
மும்பைக்கு கொண்டு சென்று அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நடிகை கங்கனா ரனாவத்தின் பாடிகார்ட் ஒருவர் இது போன்ற மோசடி செயலில் ஈடுபட்டுள்ளார் என்பது தெரிய வந்துள்ளது.
இந்த தகவலை அறிந்த பாலிவுட் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கங்கனா ரனாவத்தை மோசமாக விமர்சித்து வருகின்றனர்.
மேலும், கைது செய்யப்பட்ட குமார் ஹெக்டேக்கு தகுந்த தண்டனை கொடுக்க வேண்டும் என்றும் கூறி வருகின்றனர்.