செப். 25-இல் நாடு தழுவிய வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு: விவசாயிகள் சங்கம்

புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடி வரும் விவசாயிகள் சங்கத்தினர் செப்டம்பர் 25ஆம் தேதி நாடு தழுவிய வேலைநிறுத்த போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

செப். 25-இல் நாடு தழுவிய வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு: விவசாயிகள் சங்கம்

புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடி வரும் விவசாயிகள் சங்கத்தினர் செப்டம்பர் 25ஆம் தேதி நாடு தழுவிய வேலைநிறுத்த போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

டெல்லியில் மத்திய அரசின் மூன்று புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து கடந்த 9 மாதங்களாக அரியானா, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பல்வேறு விதமான போராட்டத்தை முன்னெடுத்து வரும் போராட்டக் குழுவினர் வருகின்ற செப்டம்பர் 25ஆம் தேதி நாடு தழுவிய வேலைநிறுத்த போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

முன்னதாக, மத்திய அரசுடன் விவசாயிகள் சங்கத்தினர் நடத்திய 12 கட்டப் பேச்சுவார்த்தைகளும் தோல்வியில் முடிந்த நிலையில், சட்டத்தை திரும்பப் பெறும் வரை தங்களின் போராட்டம் தொடரும் என தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.