'ஆபரேஷன் காவேரி' நிறைவு; அமைச்சர் ஜெய்சங்கர் ட்வீட்...!
ஆபரேஷன் காவேரியின் கீழ் சூடானில் இருந்த இந்தியர்கள் முழுவதுமாக மீட்கப்பட்ட நிலையில் தற்போது அந்த நடவடிக்கை நிறைவுபெற்றதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
சூடானில் ராணுவம் மற்றும் துணை ராணுவத்தினரிடையே ஏற்பட்ட மோதலால் அங்கு சிக்கித்தவித்த 3 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட இந்தியர்களை ”ஆபரேஷன் காவேரி” மூலம் மீட்கும் நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டது.
இதையும் படிக்க : தொடரும் கலவரம்...பெட்ரோலுக்கு வந்த நெருக்கடி...காத்திருக்கும் மக்கள்!
அதன்படி, இந்திய பாதுகாப்புப்படை விமானம் மற்றும் கப்பல் மூலம் சூடானில் சிக்கித்தவித்த இந்தியர்கள், சவுதி அரேபியாவின் ஜெட்டா பகுதியிலிருந்து தாயகம் திரும்பினர். இந்நிலையில் இதுவரை 3 ஆயிரத்து 862 இந்தியர்கள் சூடானில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாகவும் இத்துடன் இந்த ஆபரேஷன் நிறைவடைவதாகவும் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
An Indian Air Force C130 J flight carrying 47 passengers has landed in India.
— Dr. S. Jaishankar (@DrSJaishankar) May 5, 2023
With this arrival, 3862 persons have been moved out of Sudan through #OperationKaveri.
Prime Minister @narendramodi ’s commitment to ensuring the safety and security of all Indians abroad was our… pic.twitter.com/Ham0Ci3zdh