'ஆபரேஷன் காவேரி' நிறைவு; அமைச்சர் ஜெய்சங்கர் ட்வீட்...!

'ஆபரேஷன் காவேரி' நிறைவு; அமைச்சர் ஜெய்சங்கர் ட்வீட்...!

ஆபரேஷன் காவேரியின் கீழ் சூடானில் இருந்த இந்தியர்கள் முழுவதுமாக மீட்கப்பட்ட நிலையில் தற்போது அந்த நடவடிக்கை நிறைவுபெற்றதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

சூடானில் ராணுவம் மற்றும் துணை ராணுவத்தினரிடையே ஏற்பட்ட மோதலால் அங்கு சிக்கித்தவித்த 3 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட இந்தியர்களை ”ஆபரேஷன் காவேரி” மூலம் மீட்கும் நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டது.

இதையும் படிக்க : தொடரும் கலவரம்...பெட்ரோலுக்கு வந்த நெருக்கடி...காத்திருக்கும் மக்கள்!

அதன்படி, இந்திய பாதுகாப்புப்படை விமானம் மற்றும் கப்பல் மூலம் சூடானில் சிக்கித்தவித்த இந்தியர்கள், சவுதி அரேபியாவின் ஜெட்டா பகுதியிலிருந்து தாயகம் திரும்பினர். இந்நிலையில்  இதுவரை 3 ஆயிரத்து 862 இந்தியர்கள் சூடானில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாகவும் இத்துடன் இந்த ஆபரேஷன் நிறைவடைவதாகவும் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.