உட்கட்சி பூசலுக்கு முடிவு கட்ட காங். தலைமை எடுத்த அதிரடி முடிவு  

பஞ்சாப்பை தொடர்ந்து தற்போது ராஜஸ்தானில் காங்கிரஸ் பெருந்தலைவர்கள் இடையேயான உட்கட்சி பூசலை தீர்க்கும் முயற்சியில் கட்சி தலைமை ஈடுபட்டுள்ளது.

உட்கட்சி பூசலுக்கு முடிவு கட்ட காங். தலைமை எடுத்த அதிரடி முடிவு   

பஞ்சாப்பை தொடர்ந்து தற்போது ராஜஸ்தானில் காங்கிரஸ் பெருந்தலைவர்கள் இடையேயான உட்கட்சி பூசலை தீர்க்கும் முயற்சியில் கட்சி தலைமை ஈடுபட்டுள்ளது.

பஞ்சாப் மாநிலத்தில் ஏற்பட்ட உட்கட்சி பூசல் ஒருவழியாக முடிவுக்கு வந்துள்ள நிலையில் தற்போது ராஜஸ்தானில் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. இதைத்தொடர்ந்து ராஜஸ்தான் மாநில கட்சி விவகாரங்களில் கட்சித்தலைமை தற்போது கவனத்தை திருப்பி உள்ளது. அதன்படி மாநில அமைச்சரவையை மாற்றியமைக்க கட்சி தலைமை முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த கட்சியின் அமைப்பு பொபாதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால், மற்றொரு பொதுச் செயலாளரும், மாநில பொறுப்பாளருமான அஜய் மக்கான் ஆகியோர் ஜெய்ப்பூர் சென்றுள்ளனர்.

அங்கு அவர்கள் மாநில அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளுடன் இது தொடர்பாக ஆலோசனை நடத்தி வருகின்றனர். இதில் துணை முதல்வர் சச்சின் பைலட்டுக்கு மத்திய பொறுப்பு வழங்கப்பட கூடும் எனவும் அவர் மாநில பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்பட்டு டெல்லிக்கு மாற்றப்பட கூடும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.