தொடர் வீழ்ச்சியை சந்தித்து வரும் கொரோனா!.. நிம்மதியடையும் மக்கள்

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு தொடர்ந்து குறைந்து வருகிறது.

தொடர் வீழ்ச்சியை சந்தித்து வரும் கொரோனா!.. நிம்மதியடையும் மக்கள்

இந்தியாவில் தொடர்ந்து 3 வது அலையின் தாக்கம் குறைந்து வருகிறது. அதன்படி, நேற்றைய பாதிப்பு 8 ஆயிரத்து 13 ஆக இருந்தது. 

இந்நிலையில், இன்று புதிதாக 6 ஆயிரத்து 915 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது நேற்றைய பாதிப்பை விட 14 சதவீதம் குறைவானதாகும். இதன் மூலம் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,29,31,055 ஆக அதிகரித்துள்ளது.

பலி எண்ணிக்கை தற்போது குறைந்து வருகிறது. அதன்படி, ஒரே நாளில் 180 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,14,023 ஆக அதிகரித்துள்ளது..

கடந்த 24 மணி நேரத்தில் 16,864 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். அதன் மூலம், இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 4,23,24,550 ஆக அதிகரித்துள்ளது. மின்னல் வேகத்தில் அதிகரித்து வந்த கொரோனா பாதிப்பு தற்போது அதே வேகத்தில் குறைந்து வருவதால் மக்கள் கொஞ்சம் நிம்மதி அடைந்துள்ளனர்.  கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 92,472 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை செலுத்தப்பட்ட தடுப்பூசிகளின் எண்ணிக்கை 1,77,70,25,914 ஆக உள்ளது.