பெண்களும், தாழ்த்தப்பட்டோரும் அமைச்சரானதை எதிர்க்கட்சிகளால் ஜீரணிக்க முடியவில்லை .! பிரதமர் மோடி விமர்சனம்.! 

பெண்களும், தாழ்த்தப்பட்டோரும் அமைச்சரானதை எதிர்க்கட்சிகளால் ஜீரணிக்க முடியவில்லை .! பிரதமர் மோடி விமர்சனம்.! 

பெண்களும், தாழ்த்தப்பட்டோரும் அமைச்சர்களாகி இருப்பதை எதிர்க்கட்சிகளால் ஜீரணிக்க முடியவில்லை என்று பிரதமர் நரேந்திரமோடி குற்றம்சாட்டியுள்ளார்.

நாடாளுமன்றத்தின் மழைக் கால கூட்டத் தொடர் இன்று தொடங்கிய நிலையில், புதிதாக பொறுப்பேற்றுள்ள அமைச்சர்களை அவைக்கு அறிமுகம் செய்து வைத்து, பிரதமர் மோடி பேசத் தொடங்கினார். ஆனால் மக்களவையில் அவரைப் பேசவிடாமல் எதிர்க்கட்சியினர் தொடர் அமளியில் ஈடுபட்டனர். மாநிலங்களவையில் அவரைப் பேச விடாமல், எதிர்க்கட்சிகள் தொடர்ந்து முழக்கங்களை எழுப்பியதால், இரு அவைகளின் செயல்பாடுகளும் பாதிக்கப்பட்டன.  

அமளிக்கிடையேயும் பேசிய பிரதமர் மோடி, புதிதாக பொறுப்பேற்றுள்ள சில அமைச்சர்கள், இதர பிறப்படுத்தப்பட்ட வகுப்பினரைச் சார்ந்த விவசாயிகளின் பிள்ளைகள் என்றார். இதேபோல், தாழ்த்தப்பட்டவர்களும், பெண்களும் அமைச்சர்களாகி இருப்பதாகவும், இதை எதிர்க்கட்சிகளால் ஜீரணிக்க முடியாத காரணத்தால் தான் அமளியில் ஈடுபடுவதாகவும் சாடினார். பெண்கள் அமைச்சர்களாகி இருப்பது, சிலருக்கு வலியை ஏற்படுத்தியுள்ளதால் தான், அவர்களை அறிமுகம் செய்து வைக்க, எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவிப்பதாகவும் கடுமையாகச் சாடினார்.