கடலோர காவல்படையை பாராட்டிய பாதுகாப்பு துறை அமைச்சர்..!!!

கடலோர காவல்படையை பாராட்டிய பாதுகாப்பு துறை அமைச்சர்..!!!

கடற்படை மற்றும் கடலோர காவல்படையை வலுப்படுத்துவதில் நமது பாதுகாப்பு கப்பல் தளம் முக்கிய பங்கு வகிக்கிறது.  இது தளங்களை சரியான நேரத்தில் வழங்குவது மட்டுமல்லாமல், இராணுவத்திற்கு சிறந்த தரமான பாதுகாப்பு பொருட்களையும் உறுதி செய்கிறது. 

மும்பையில் அமைந்துள்ள பாதுகாப்பு கப்பல் கட்டும் தளம் கடற்படை மற்றும் கடலோர காவல்படைக்கு முக்கியப் பங்காற்றுவதாக பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.  மும்பை கப்பல் கட்டும் தளத்தில் நடைபெற்ற பாதுகாப்பு அமைச்சகத்தின் ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் அவர் இதனைத் தெரிவித்தார். 

கூட்டத்திற்கு தலைமை வகித்து பேசிய ராஜ்நாத் சிங், ”கடற்படை மற்றும் கடலோர காவல்படையை வலுப்படுத்துவதில் நமது பாதுகாப்பு கப்பல் தளம் முக்கிய பங்கு வகிக்கிறது.  இது தளங்களை சரியான நேரத்தில் வழங்குவது மட்டுமல்லாமல், இராணுவத்திற்கு சிறந்த தரமான பாதுகாப்பு பொருட்களையும் உறுதி செய்கிறது.” எனக் கூறியுள்ளார்.

-நப்பசலையார்

இதையும் படிக்க:   26/11 தாக்குதல்...உண்மையில் நடந்தது என்ன...வாயை திறந்த அப்போதைய செயலாளர்!!!