"இந்தியாவில் சர்வாதிகாரம் தொடங்கி விட்டது" சாக்ஷி மாலிக் காட்டம்!

"இந்தியாவில் சர்வாதிகாரம் தொடங்கி விட்டது" சாக்ஷி மாலிக் காட்டம்!

இந்தியாவில் சர்வாதிகாரம் தொடங்கி விட்டது என பிரபல மல்யுத்த வீராங்கனை சாக்ஷி மாலிக் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவரும் பாஜக நாடாளுமன்ற உறுப்பினருமான பிரிஜ் பூஷனை கைது செய்யக் கோரி டெல்லி ஜந்தர் மந்தரில் மல்யுத்த நட்சத்திரங்கள், கடந்த ஜனவரி மாதம் முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இருந்தும் பிரிஜ் பூஷன் கைது செய்யப்படவில்லை. இந்நிலையில் நேற்று நடைபெற்ற நாடாளுமன்ற திறப்பு விழாவில் பிரிஜ் பூஷன் கலந்து கொள்ள இருந்தார். இதனையொட்டி புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தை நோக்கி மல்யுத்த நட்சத்திரங்கள் நேற்று அமைதிப் பேரணியில் ஈடுபட முயன்றனர்.Vinesh Phogat, Sakshi Malik released; other protesting wrestlers remain  detained by Delhi Police | Watch | Mint

பேரணி தொடங்கிய சில நிமிடங்களிலேயே அனைவரையும் தடுத்து நிறுத்திய போலீசார், மல்யுத்த வீராங்கனைகள் வினேஷ் பொகாட், சாக்சி மாலிக் உள்ளிட்ட அனைவரையும் வலுக்கட்டாயமாக கைது செய்தனர். மேலும் போராட்ட ஏற்பாட்டாளர்கள் உட்பட பலர் மீது 6 பிரிவுகளின் கீழ் டெல்லி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. Wrestlers' protest: FIR against organisers, others on charges of rioting,  obstructing public servant | Deccan Herald

இந்நிலையில், இந்தியாவில் சர்வாதிகாரம் தொடங்கி விட்டது என மல்யுத்த நட்சத்திரம் சாக்ஷி மாலிக் டுவீட் செய்துள்ளார். மேலும், பாலியல் வன்கொடுமை செய்த பிரிஜ் பூஷன் மீது வழக்குப்பதிவு செய்ய 7 நாட்கள் தேவைப்பட்ட நிலையில், அமைதிப்பேரணி நடத்த முயன்ற தங்கள் மீது வழக்குப் பதிய 7 மணி நேரம் கூட ஆகவில்லை. இந்திய வீராங்கணைகள் நடத்தப்படும் விதத்தை, உலகமே வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது. இந்தியாவில் சர்வாதிகாரம் தொடங்கி விட்டது என அப்பதிவில் மத்திய அரசு மீது அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

இதையும் படிக்க:அடுத்தக்கட்ட ஆளுமைகள்!