ஜம்மு-காஷ்மீரில் பதற்றம்... ராணுவ முகாமில் டிரோன் நடமாட்டம்... 

ஜம்மு-காஷ்மீரில் சந்தேகத்திற்கிடமாக 4 டிரோன்கள் சுற்றித்திரிந்ததாக போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.

ஜம்மு-காஷ்மீரில் பதற்றம்... ராணுவ முகாமில் டிரோன் நடமாட்டம்... 

சுதந்திர தினத்தை முன்னிட்டு பாகிஸ்தான் பயங்கரவாதிகள் டிரோன் மூலம் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருப்பதாக உளவுதுறை தகவல் கிடைத்ததை அடுத்து, பாதுகாப்பு படையினர் மற்றும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில், நேற்றிரவு சம்பா மாவட்டத்திற்கு உட்பட்ட  பாரி பிராமணா பகுதியில் சந்தேகத்திற்கு இடமாக  4  டிரோன்கள் சுற்றித்திரிந்துள்ளது. அவற்றில் ஒன்று ராணுவ முகாம் அருகே சுற்றியதாகவும், ஆனால் வரையறுக்கப்பட்ட எல்லைப்பகுதியில் நுழையாததால், அந்த டிரோன்கள் மீது பதில் தாக்குதல் நடத்தப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாக டிரோன் நடமாட்டம் குறித்து, மத்திய பாதுகாப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.