விவசாயிகளின் ரயில் மறியல் போராட்டம் - ரயில் சேவைகள் பாதிப்பு  

உத்தரப்பிரதேசத்தில் விவசாயிகளின் ரயில் மறியல் போராட்டம் காரணமாக பஞ்சாப் மற்றும் ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களில் ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளன.

விவசாயிகளின் ரயில் மறியல் போராட்டம் - ரயில் சேவைகள் பாதிப்பு   

உத்தரப்பிரதேசத்தில் விவசாயிகளின் ரயில் மறியல் போராட்டம் காரணமாக பஞ்சாப் மற்றும் ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களில் ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளன.

உத்தரப்பிரதேச மாநிலம் லக்கிம்பூர் கெரி பகுதியில் கடந்த 3ஆம் தேதி, விவசாயிகள் மீது கார் ஏற்றி கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இவ்வழக்கில் தொடர்புடைய மத்திய இணையமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா கைது செய்யப்பட்டுள்ளார்.   இவ்வழக்கு விசாரணை நியாயமாக நடைபெற, மத்திய இணையமைச்சர் அஜய் மிஸ்ரா பதவி விலக கோரி, உத்தரப்பிரதேசத்தில் விவசாயிகள் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த ரயில் மறியல் காரணமாக பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களில் 50க்கும் மேற்பட்ட ரயில் சேவைகள் முடங்கியுள்ளது.