விவசாயியின் வங்கி கணக்கில் ரூ.52 கோடி வரவு... வங்கிகளின் குளறுபடிகளால் மக்கள் குழப்பம்...

விவசாயியின் வங்கி கணக்கில் ரூ.52 கோடி வரவு

விவசாயியின் வங்கி கணக்கில் ரூ.52 கோடி வரவு... வங்கிகளின் குளறுபடிகளால் மக்கள் குழப்பம்...

பீகார் மாநிலத்தில், கடந்த சில நாட்களாக வங்கிகளின் தவறுகளால் சாமானிய மக்களின் கணக்கில் கோடிக்கணக்கில் பணம் வரவு வைக்கப்படுவது ஆச்சரியத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில், தற்போது பீகாரின் முசாஃபர்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த ராம் பகதூர் ஷா என்ற விவசாயி வங்கிக் கணக்கில் 52 கோடி ரூபாய் வரவு வைக்கப்பட்டுள்ளது.

இந்த பணத்தை எப்படியும் வங்கி மீண்டும் பெற்றுக் கொள்ளும் என அறிந்த விவசாயி, இதில் இருந்து தங்களின் குடும்பத்திற்கு சிறிய தொகையை அளித்து உதவி செய்ய வேண்டும் என அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.