பட்டப்பகலில் நீதிமன்ற வளாகத்தில் பிரபல ரவுடி உள்பட 4 பேர் சுட்டுக்கொலை...

பட்டப்பகலில் டெல்லி நீதிமன்ற வளாகத்தில்,  நடந்த துப்பாக்கிச்சூட்டில் பிரபல ரவுடி உள்பட 4 பேர் உயிரிழந்தனர்.  

பட்டப்பகலில் நீதிமன்ற வளாகத்தில் பிரபல ரவுடி உள்பட 4 பேர் சுட்டுக்கொலை...

டெல்லியை சேர்ந்த பிரபல ரவுடி கும்பலின் தலைவன் ஜிதேந்தர் கோகி. பல்வேறு கொலை, கொள்ளை குற்ற வழக்குகளில் தேடப்பட்டு வந்த இவரை, அண்மையில்  கைது செய்த போலீசார் திகார் சிறையில் அடைத்திருந்தனர். இந்தநிலையில், இன்று நீதிமன்றவிசாரணைக்காக ஜிதேந்தர் கோகி, வடக்கு டெல்லியில் உள்ள ரோகிணி  நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டார். அவனை சுற்றிலும் போலீசார் நின்று பலத்த பாதுகாப்பு அளித்திருந்தனர்.

இந்நிலையில் வழக்கறிஞர் போல் சீருடை அணிந்து வந்த மர்ம நபர்கள், திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தினர்.நீதிமன்றத்தின் உட்பகுதியில் பலமுறை துப்பாக்கிச் சுடும் சத்தம் கேட்டதால் அப்பகுதியே போர்க்களம் போல காட்சியளித்தது.இந்த நிலையில், இந்த துப்பாக்கிச்சூட்டில்  ஜிதேந்தர் கோகி உயிரிழந்தார். இதையடுத்து காவல்துறையினர் நடத்திய பதில் தாக்குதலில் 2 ரவுடிகளும் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்த துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் உயிரிழந்திருப்பதாகவும், பெண் வழக்கறிஞர் உட்பட சிலர் காயமடைந்திருப்பதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். பட்டப்பகலில், போலீசாரின் கண்முன்னரே நடந்த இந்த தாக்குதல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.