இந்தியாவில் படிப்படியாக குறைந்து வரும் கொரோனா தொற்று

இந்தியாவில் தொடர்ந்து குறைந்து வருகிறது தினசரி கொரோனா பாதிப்பு

இந்தியாவில் படிப்படியாக குறைந்து வரும் கொரோனா தொற்று

நாடு முழுவதும் கடந்த ஒரே நாளில் 13 ஆயிரத்து 166 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது நேற்றைய பாதிப்பை காட்டிலும் குறைவு என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதனால் நாட்டின் பாதிப்பு விகிதம் 1.28 சதவீதமாக குறைந்துள்ளது. கடந்த ஒரே நாளில் தீவிர தொற்று பாதிப்புக்கு 302 பேர் பலியாகியுள்ளனர். இதனால் நாட்டின் மொத்த பலி எண்ணிக்கை 5 லட்சத்து 13 ஆயிரத்து 226 ஆக அதிகரித்துள்ளது. இதனிடையே, நேற்று மட்டும் 26 ஆயிரத்து 988 பேர் தொற்று நீங்கி குணமடைந்துள்ளனர்.

குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 22 லட்சத்து 46 ஆயிரத்து 884 ஆக அதிகரித்துள்ளது. ஒரு லட்சத்து 34 ஆயிரத்து 235 பேர் தொற்று பாதிப்புக்கு சிகிச்சையில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் 176 கோடியே 86 லட்சத்து 89 ஆயிரத்து 266 தடுப்பூசி டோஸ்கள் மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.