இழந்த கண்பார்வையை மீண்டும் பெற்ற மூதாட்டி..! தடுப்பூசி போட்டதால் நிகழ்ந்த அதிசயம்.! 

இழந்த கண்பார்வையை மீண்டும் பெற்ற மூதாட்டி..! தடுப்பூசி போட்டதால் நிகழ்ந்த அதிசயம்.! 

கண்பார்வை இழந்த ஒரு மூதாட்டி கோவிட் தடுப்பூசி போட்டப்பிறகு பார்வையை பெற்றுள்ள அதிசயம் மஹாராஷ்டிராவில் நிகழ்ந்துள்ளது. 

கொரோனா பரவல் உலகையே முடக்கியுள்ள நிலையில், அதற்கு தீர்வு தடுப்பூசிதான் என்று கூறப்படுகிறது. அதைத் தொடர்ந்து தடுப்பூசி தயாரிப்பில் பல நாடுகள் ஈடுபட்ட நிலையில் பல்வேறு தடுப்பூசிகள் உற்பத்தி செய்யப்பட்டு பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது. ஆனால் தடுப்பூசியால் பக்கவிளைவுகள் ஏற்படுகிறது என பல்வேறு தரப்பில் இருந்து புகார் எழுந்துள்ளது. மேலும் தடுப்பூசியால் மரணங்களும் ஏற்பட்டன.

அதுமட்டுமன்றி, தடுப்பூசி போட்டவர்கள் உடம்பில் சில மாற்றங்கள் ஏற்பட்டதாகவும் புரளிகள் கிளம்பின. இந்நிலையில், கண்பார்வை இழந்த ஒரு மூதாட்டி கோவிட் தடுப்பூசி போட்டப்பிறகு பார்வையை பெற்றுள்ள அதிசயம் நிகழ்ந்துள்ளது. மஹாராஷ்டிராவைச் சேர்ந்த 70 வயதான மூதாட்டி கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு கண்புரை ஏற்பட்டு இரு கண் பார்வையையும் இழந்துள்ளார். கோவிட் தொற்றுக்கு எதிரான கோவிஷீல்டு தடுப்பூசியை போட்டுக்கொண்ட அவர், தற்போது கண் பார்வை ஓரளவு மீண்டும் கிடைத்துள்ளதாக கூறியுள்ளது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.