இந்திய வீரர்களை உற்சாகப்படுத்த ஒளிரூட்டப்பட்ட ஹவுரா பிரிட்ஜ்

டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்கும் இந்திய வீரர்களை உற்சாகப்படுத்தும் வகையில் கொல்கத்தாவில் உள்ள ஹவுரா பிரிட்ஜ்  வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. 

இந்திய வீரர்களை உற்சாகப்படுத்த ஒளிரூட்டப்பட்ட ஹவுரா பிரிட்ஜ்
ஜப்பானின் டோக்கியோ நகரில் வரும் 23-ம் தேதி முதல் ஆகஸ்ட் 8 வரை ஒலிம்பிக் போட்டி நடைபெற உள்ளது. இந்த ஒலிம்பிக்கில் இந்தியா சார்பில் 115-க்கும்மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்ள உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 
18 விளையாட்டுகளை உள்ளடக்கிய மொத்தம் 69 போட்டிகளில் இந்தியா பங்கேற்பது இதுவே முதல்முறை. இந்நிலையில் ஒலிம்பிக்கில் பங்கேற்கும் இந்திய வீரர்களை ஊக்கப்படுத்தும் வகையில் கொல்கத்தாவில் உள்ள ஹவுரா பிரிட்ஜ்  வண்ண விளக்குகளால்  அலங்கரிக்கப்பட்டுள்ளது.