பாட்டியாலாவில் இருதரப்பினர் இடையே கடும் மோதல்..! கற்கள்,வாள்களை கொண்டு தாக்குதல்..!!

பாஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவில் இருதரப்பினர் இடையே கடும் மோதல் வெடித்த நிலையில்  கற்கள், வாள்களை கொண்டு ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டதால் பெரும் பதற்றம் நிலவி  வருகிறது.

பாட்டியாலாவில் இருதரப்பினர் இடையே கடும் மோதல்..! கற்கள்,வாள்களை கொண்டு தாக்குதல்..!!

பஞ்சாப் மாநிலம் பாட்டியாவில் காளி தேவி கோவில் அருகே இரு பிரிவினருக்கு இடையே கடுமையான மோதல் ஏற்பட்டது; காலிஸ்தான் ஆதரவாளர்கள் மற்றும் எதிர்ப்பாளர்கள் இடையே இந்த மோதல் நிகழ்ந்துள்ளது. முதலில் வாக்குவாதமாக ஏற்பட்ட பிரச்சனை பின்னர் கைகலப்பாக மாறியது; அருகில் உள்ள மாடி கட்டிடங்களில் இருந்து கற்களை வீசி தாக்கினர். மோதலின் உச்சமாக ஒருவரை ஒருவர் வாள் கொண்டு தாக்கி கொண்டனர். 

அசாதாரண நிலையை கருத்தில் கொண்டு போலீசார் அதிக அளவில் குவிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் இதற்கு காங்கிரஸ், பாரதிய ஜனதா உள்ளிட்ட கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில் பாட்டியாலாவில் ஏற்பட்டுள்ள வன்முறை என்பது துரதிர்ஷ்டவசமானது என முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

மேலும், பஞ்சாப் மாநிலத்தின் பொது அமைதி மற்றும் சகோதரத்துவம் என்பது மிகவும் அவசியம் எனவும் நிலமை முழுமையாக கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் பகவந்த் மான் தெரிவித்துள்ளார்.