760டன் உயிர்காக்கும் மருந்துகளை இலங்கைக்கு அனுப்பியது இந்தியா...!

760டன் உயிர்காக்கும் மருந்துகளை இலங்கைக்கு அனுப்பியது இந்தியா...!

பொருளாதார சிக்கலில் சிக்கியுள்ள இலங்கைக்கு இந்தியக் கடற்படை கப்பல் மூலமாக உயிர்காக்கும் மருந்துகளை இந்தியா வழங்கியுள்ளது. எரிபொருள் பற்றாக்குறை, அத்தியாவசிய உணவுப் பொருள்கள் பற்றாக்குறை என வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியில் கடும் பாதிப்புகளை இலங்கை சந்தித்துவருகிறது.

நிதி சிக்கல்களைச் சமாளிக்க முடியாமல் அரசு திணறிவருவதால் அதிபருக்கு எதிரான போராட்டங்கள், முற்றுகைகள் என தொடர்ந்து நடந்து வருகிறது.

இந்நிலையில், 760 டன் எடையுள்ள 107 வகையான உயிர்காக்கும் மருந்துகளை கடற்படை கப்பலான கரியல் மூலமாக இலங்கைக்கு இந்திய அரசு வழங்கியுள்ளது. இதனை இலங்கை சுகாதாரத் துறை அமைச்சர் சன்னா ஜயசுமணா பெற்றுக்கொண்டார்.