அயோத்தியில் உயிர் தியாகம் செய்த கரசேவகர்.. சாலைகளுக்கு பெயர் சூட்ட முடிவு

அயோத்தியில் உள்ள சாலைகளுக்கு ராம் ஜன்மபூமி இயக்கத்தில் உயிர் தியாகம் செய்த கரசேவகர்களின் பெயர்கள் சூட்டப்பட உள்ளதாக உத்தரபிரதேச துணை முதல்வர் கேசவ் மவுரியா தெரிவித்துள்ளார்.

அயோத்தியில் உயிர் தியாகம் செய்த கரசேவகர்.. சாலைகளுக்கு பெயர் சூட்ட முடிவு

அயோத்தியில் உள்ள சாலைகளுக்கு ராம் ஜன்மபூமி இயக்கத்தில் உயிர் தியாகம் செய்த கரசேவகர்களின் பெயர்கள் சூட்டப்பட உள்ளதாக உத்தரபிரதேச துணை முதல்வர் கேசவ் மவுரியா தெரிவித்துள்ளார்.

ராமர் கோவிலை திறக்க கடந்த 1990 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ராம் ஜன்மபூமி இயக்கத்தில் நாடு முழுவதிலும் இருந்து ஏராளமான கரசேவகர்கள் அயோத்தியை நோக்கி படைஎடுத்தனர்.

ஆயிரக்கணக்கான கரசேவகர்களைத் தடுக்க முடியாத காவல் துறை துப்பாக்கிச் சூடு நடத்தியது. இதில் 16 கரசேவகர்கள் உயிரிழந்தனர்.

இந்த நிலையில் அயோத்தியில் ராமர் கோவில் கட்டுமான பணி தொடங்கப்பட்டட்டுள்ள நிலையில் அயோத்தியில் உயிர் தியாகம் செய்த கரசேவகர்களின் பெயர்களை அங்குள்ள சாலைகளுக்கு சூட்ட முதலமைச்சர் யோகி ஆதித்தியநாத் முடிவு செய்துள்ளதாக துணை முதல்வர் கேசவ் மவுரியா தெரிவித்துள்ளார்..