பாடங்கள் முழுமையாக நடத்தப்படாததால் ஆன்லைனில் செமஸ்டர் தேர்வு நடத்த மாணவர்கள் கோரிக்கை!
செமஸ்டர் தேர்வுகளை ஆன்லைனில் நடத்த வலியுறுத்தி கொல்கத்தா பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்கள் மூடப்பட்டு ஆன்லைன் மூலம் பாடங்கள் நடத்தப்பட்ட நிலையில், இன்னும் நாட்டின் பல்வேறு மாநிலங்களில் பாடங்கள் ஆன்லைன் மூலம் நடத்தப்பட்டு வருகிறது.
அதன்படி கொல்கத்தா பல்கலைக்கழகத்திலும் ஆன்லைன் மூலம் பாடம் எடுக்கப்பட்ட நிலையில், தற்போது செமஸ்டர் தேர்வுகளை பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது.
இதை எதிர்த்து மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆன்லைனில் ஒரு மாதம் மட்டுமே பாடங்கள் எடுக்கப்பட்டதாக கூறப்படும் நிலையில், பாடங்கள் முழுமையாக கற்பிக்கப்படாமல் தேர்வுகள் மட்டும் அறிவிக்கப்பட்டுள்ளதாக மாணவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
இதனால் தேர்வுகளையும் ஆன்லைனில் நடத்த வேண்டும் என வலியுறுத்தி பதாகைகளை ஏந்தி மாணவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.