ஒரு லிட்டர் பெட்ரோல் 1 ரூபாய்... பெட்ரோல் பங்கில் குவிந்த மக்கள்...

ஒரு லிட்டர் பெட்ரோல் 1 ரூபாய்... பெட்ரோல் பங்கில் குவிந்த மக்கள்...

மகாராஷ்டிராவில் ஆதித்யா தாக்கரேவின் பிறந்தநாளை முன்னிட்டு ஒரு லிட்டர் பெட்ரோல் ஒரு ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.

பெட்ரோல், டீசல்  விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் , பொதுமக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் விலை உயர்வுக்கு பல கண்டனங்களும், போராட்டங்களும் எழுந்து வருகின்றன.

இந்த சூழலில் மகாராஷ்ராவில் ஒரு லிட்டர் பெட்ரோல் ஒரு ரூபாய்க்கு விற்பனை என்பது அதிர்ச்சியை அளிக்கிறது.. மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரேவின் மகனும், மாநில சுற்றுச்சூழல் துறை அமைச்சருமான ஆதித்யா தாக்கரேவிற்கு நேற்று  முன் தினம் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது.

இந்த பிறந்தநாளை முன்னிட்டு மும்பை உள்ள எம்.ஐ.டி.சி பகுதியில் ஒரு லிட்டர் பெட்ரோல் ஒரு ரூபாய் என்று அங்கு உள்ள ஒரு பெட்ரோல் நிலையத்தில் விநியோகிக்கப்பட்டது. காலை 10 மணி முதல் நண்பகல் 12 மணி வரை சிவசேனா நிர்வாகியான  யோகேஷ் மகாத்ரே இதனை விநியோகம் செய்தார். இதனை அறிந்தவர்கள் பெட்ரோல் நிலையம் முன்பு இரு சக்கர வாகனங்களில் குவிந்தனர்