பிரதமர் மோடி - மம்தா பானர்ஜி இன்று சந்திப்பு... மாநில பிரச்சனைகள் குறித்து கோரிக்கை...

5 நாள் பயணமாக டெல்லி சென்றுள்ள மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி இன்று மாலை பிரதமர் மோடியை சந்திக்க உள்ளார்.

பிரதமர் மோடி - மம்தா பானர்ஜி இன்று சந்திப்பு... மாநில பிரச்சனைகள் குறித்து கோரிக்கை...
தொடர்ந்து மூன்றாவது முறையாக முதலமைச்சராக பதவி ஏற்றுள்ள மம்தா பானர்ஜி நேற்று டெல்லி சென்றார். இந்நிலையில் இன்று மாலை 4 மணிக்கு பிரதமர் மோடியை சந்திக்கும் மம்தா பானர்ஜி மாநிலத்துக்கு ஒதுக்க வேண்டி நிதி குறித்து கோரிக்கை வைப்பார் என கூறப்படுகிறது.
 
அதன் பிறகு  குடியரசு தலைவரையும் சந்திக்க திட்டமிட்டுள்ள மம்தா பானர்ஜி  காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியுடன் நாடாளுமன்ற தேர்தல் தொடர்பான ஆலோசனையில் ஈடுபடுவார் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
 
2024 மக்களவை தேர்தலில் பாஜகவுக்கு எதிராக எதிர்கட்சிகளை ஒன்று திரட்டும் வேலையிலும் மம்தா இந்த பயணத்தின் போது ஈடுபட உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.