மேற்குவங்கத்தில் நாளை முதல் தேர்தல் பிரசாரத்தை துவங்கும் மம்தா பானர்ஜி...

மேற்கு வங்காள இடைத்தேர்தலில் போட்டியிடும் மம்தா பானர்ஜி  நாளை முதல் பிரசாரத்தை துவங்க உள்ளார்.

மேற்குவங்கத்தில் நாளை முதல் தேர்தல் பிரசாரத்தை துவங்கும் மம்தா பானர்ஜி...

மேற்கு வங்காள இடைத்தேர்தலில் போட்டியிடும் மம்தா பானர்ஜி  நாளை முதல் பிரசாரத்தை துவங்க உள்ளார்.

மேற்கு வங்காள மாநிலத்தில் பவானிபூர், ஜாங்கிபூர், சாம்செர்காஞ்ச் ஆகிய 3 தொகுதிகளுக்கு வரும் 30-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை திரிணாமுல் காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. கடந்த மே மாதம் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் நந்திகிராம் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்த மம்தா பானர்ஜி, தற்போது பபானிப்பூரில் போட்டியிடுகிறார்.

இந்தத் தொகுதியில் அவர் தொடர்ந்து வெற்றிபெற்று வந்த நிலையில் தற்போது மீண்டும் அதே தொகுதியில் போட்டியிட உள்ளார். இந்நிலையில் தனது இடைத்தேர்தல் பிரசாரத்தை நாளை முதல் அவர் துவங்க உள்ளார். தற்போது அம்மாநில முதலமைச்சராக உள்ள மம்தா பானர்ஜி நவம்பர் மாத இறுதிக்குள், எம்.எல்.ஏவாக  வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்.