கோவா செல்கிறார் மம்தா…. அரசியல் பின்ணனி காரணமா?

கோவா சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி வருகிற 28ம் தேதி அங்கு செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கோவா செல்கிறார் மம்தா…. அரசியல் பின்ணனி காரணமா?

கோவா சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி வருகிற 28ம் தேதி அங்கு செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள கோவா சட்டமன்ற தேர்தலில் மம்தா தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சி போட்டியிட உள்ளது. பாஜக-வை வீழ்த்த சூளுரைத்துள்ள மம்தா கோவாவில் தங்கள் கட்சிக்கான களப்பணியை தொடங்கி விட்டார். மேற்கு வங்க தேர்தலை போன்றே கோவா தேர்தலிலும் பிரபல அரசியல் வியூக நிபுணர் பிரஷாந்த கிஷோர் மம்தாவுக்கு பின்புலமாக செயல்பட உள்ளார்.

இந்நிலையில் மக்களை நேரடியாக சந்திக்க மம்தா வருகிற 28ம் தேதி கோவா செல்கிறார். இதுகுறித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், கடந்த 10 ஆண்டுகளாக கோவா மக்கள் பாதிப்புகளை சந்தித்ததாகவும், ஒரு புதிய விடிலை கொண்டு வருவோம் எனவும் பதிவிட்டுள்ளார்.