300 கிலோ மாம்பழம் பரிசு: யாருக்குனு தெரியுமா?

வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசீனா 300 கிலோ மாம்பழங்களை திரிபுரா முதலமைச்சர்களுக்கு பரிசாக அளித்துள்ளார்.

300 கிலோ மாம்பழம் பரிசு: யாருக்குனு தெரியுமா?

வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசீனா 300 கிலோ மாம்பழங்களை திரிபுரா முதலமைச்சர்களுக்கு பரிசாக அளித்துள்ளார்.

பிரதமர் மோடி, மேற்கு வங்காள முதலமைச்சர் மம்தா பானர்ஜி மற்றும் இதர தலைவர்களுக்கு வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசீனா மொத்தம் 2 ஆயிரத்து 600 கிலோ மாம்பழங்களை பரிசாக நேற்று முன்தினம் அனுப்பி வைத்தார். இந்தியா-வங்காளதேசம் இடையிலான நட்புறவின் அடையாளமாக அவர் இப்பரிசினை அளித்துள்ளார். இந்நிலையில், திரிபுரா முதலமைச்சர் பிப்லப் குமாருக்கு 300 கிலோ மாம்பழங்களை வங்காளதேசம் பரிசளித்துள்ளது.

இதுகுறித்து வங்காளதேச தூதரகத்தின் துணை தூதர் கூறுகையில், திரிபுராவுடன் தாங்கள் வலிமையான நட்புறவை கொண்டுள்ளதாகவும், அதன் வெளிப்பாடாக இந்த பரிசு அனுப்பி வைக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.