எம்.எல்.ஏ ராஜாவை விமர்சித்த மாயாவதி....!!!!!

எம்.எல்.ஏ ராஜாவை விமர்சித்த மாயாவதி....!!!!!

ஒரு குறிப்பிட்ட மதத்திற்கு எதிராக சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்ததற்காக பாஜகவின் தெலுங்கானா எம்எல்ஏ இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.  அதனோடு எம்.எல்.ஏ பதவியிலிருந்தும் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

பாஜக தலைவர் டி ராஜா சிங் ஒரு மதத்திற்கு எதிராக கூறிய கருத்து "அவமானமானது" என்றும், நாட்டில் அமைதியைக் காக்க அதன் மக்களைக் கட்டுப்படுத்துவது கட்சியின் பொறுப்பல்ல என்றும் கூறியுள்ளார் பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி.

பாஜக எம்.எல்.ஏ சமீபத்தில் ஸ்டாண்ட்-அப் நகைச்சுவை நடிகர் முனாவர் ஃபரூக்கியை விமர்சிக்கும் வீடியோவை வெளியிட்டார். அதில் சிங் மதத்திற்கு எதிராக சில கருத்துக்களைக் கூறியதாகக் கூறப்படுகிறது.

பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் அவருடைய ட்விட்டரில், "தற்போது சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள நுபுர் ஷர்மாவின் சர்ச்சைக்குரிய கருத்துகளால் நாடு முழுவதும் சூடுபிடித்த சூழலே இன்னும் தணியவில்லை எனவும் தற்போது மற்றொரு பாஜக தலைவரான தெலுங்கானா எம்எல்ஏ ராஜா சிங் அதே வகையான ஆத்திரமூட்டும் செயலை செய்துள்ளார் ” எனவும் மாயாவதி தெரிவித்துள்ளார்.  மேலும் இச்செயல் அவமானகரமானது எனவும் முற்றிலும் கண்டிக்கத்தக்கது எனவும் மாயாவதி பதிவிட்டுள்ளார்.

மற்றொரு ட்வீட்டில், "இன்று ஐதராபாத்தில் பாஜக எம்எல்ஏவை தெலுங்கானா அரசு கைது செய்திருந்தாலும், நாட்டின் நற்பெயரை காயப்படுத்தாமல் காப்பதுடன், அமைதியையும் காக்க மக்களைக் கட்டுப்படுத்துவதும் பாஜக தலைமையின் பொறுப்பு” எனவும் கூறியுள்ளார் மாயாவதி.

இதையும் படிக்க: திட்டமிடப்பட்டு தொடரும் ரெய்டுகள்....!!!!!தாக்கு பிடிக்குமா ஆம் ஆத்மி!!!