அசாமில் மக்கள் பயன்பாட்டுக்கு வந்தது மெத்தனால் கலந்த பெட்ரோல்..!

அசாம் மாநிலத்தில் சோதனை அடிப்படையில் மெத்தனால் கலந்த பெட்ரோல் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

அசாமில் மக்கள் பயன்பாட்டுக்கு வந்தது மெத்தனால் கலந்த பெட்ரோல்..!

இந்தியாவில் எரிபொருள் தேவையை பூர்த்தி செய்ய பெட்ரோலுக்கு மாற்றாக மெத்தனாலை பயன்படுத்த மத்திய அரசு ஊக்குவித்து வருகிறது. இந்நிலையில் பரிட்சார்த்த அடிப்படையில் அசாம் மாநிலம் தின்சுக்கியா மாவட்டத்தில் உள்ள இந்தியன் ஆயில் பெட்ரோல் பங்குகளில் மெத்தனால் கலந்த பெட்ரோல் வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இதனை தொடங்கி வைத்து பேசிய மத்திய பெட்ரோலிய துறை இணை அமைச்சர் ராமேஸ்வர் டெலி, பெட்ரோலுடன் மெத்தனாலை கலப்பது பெட்ரோல் விலையை ஓரளவு கட்டுக்குள் வைக்க உதவும் என்றும், கச்சா எண்ணெய் இறக்குமதியை கணிசமாக குறைக்கும் எனவும் கூறினார்.