சாதிப் பாகுபாடு காட்டுவது மிகப் பெரிய பாவம் - மோடி!

சாதிப் பாகுபாடு காட்டுவது மிகப் பெரிய பாவம் என மகான் துகாராம் தெரிவித்ததாக பிரதமர் மோடி நினைவு கூர்ந்துள்ளார்.

சாதிப் பாகுபாடு காட்டுவது மிகப் பெரிய பாவம் - மோடி!

மகாராஷ்ட்ரா மாநிலத்திற்கு வந்த பிரதமர் நரேந்திர மோடி, புனே அருகே உள்ள தேகு என்ற இடத்தில் மகான் துகாராமின் கற்கோவிலை திறந்து வைத்தார்.

17ம் நூற்றாண்டில் மகராஷ்ட்ராவில் வாழ்ந்த மகான் துகாராமுக்கு தேகு-வில் பக்தர்கள் சார்பில் கோயில் கட்டப்பட்டு வழிபாடு மேற்கொள்ளப்பட்டு வந்தது. எளிய முறையில் இருந்த அந்த கோயில் தற்போது கற்கோவிலாக கட்டப்பட்டுள்ளது.

இதன்  திறப்பு விழாவில் பேசிய மோடி, நாடு சுதந்திரம் அடைந்ததன் 75 ஆம் ஆண்டு விழா கொண்டாடப்பட்டு வருவதை சுட்டிக்காட்டினார். இந்தியா மகான்களின் பூமி என குறிப்பிட்ட மோடி, அதன் காரணமாகவே, இந்தியா எப்போதும் நிலைத்து நிற்கிறது என்றார்.

துகாராம் பக்தியை மட்டும் பரப்பவில்லை என்றும் தேசபக்தி, சமூக நலம், சமூக சீர்திருத்தம் ஆகியவற்றுக்காகவும் பாடுபட்டுள்ளதாகத் தெரிவித்தார். சாதிப் பாகுபாடு காட்டுவது மிகப் பெரிய பாவம் என மகான் துகாராம் தெரிவித்ததாக பிரதமர் மோடி நினைவு கூர்ந்தார்