நோய் எதிர்ப்பு சக்தியை அழிக்கும் உருமாறிய கொரோனா: ரெண்டு டோஸ் கட்டாயம் போடுங்க!

உருமாறிய கொரோனா வைரஸ் நோய் எதிர்ப்பு சக்தியை முழுவதுமாக அழித்துவிடும் என்பதால், 2 டோஸ் தடுப்பூசி கட்டாயம் என ஆய்வில் தெரியவந்துள்ளது.

நோய் எதிர்ப்பு சக்தியை அழிக்கும் உருமாறிய கொரோனா: ரெண்டு டோஸ் கட்டாயம் போடுங்க!

உருமாறிய கொரோனா வைரஸ் நோய் எதிர்ப்பு சக்தியை முழுவதுமாக அழித்துவிடும் என்பதால், 2 டோஸ் தடுப்பூசி கட்டாயம் என ஆய்வில் தெரியவந்துள்ளது.

தடுப்பூசி செலுத்தும் பணியில் தொய்வு கண்டுள்ள மலேசியா, போர்சுகல், இந்தோனேஷியா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில் உருமாறிய கொரோனாவின் தாக்கம் அதிகம் காணப்படுகிறது. அண்மையில் பிரான்ஸ் ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வு ஒன்றில், தொற்றிலிருந்து மீண்டவர்கள் மற்றும் தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு எதிராக ஆல்பா, பீட்டா மற்றும் டெல்டா வகை வைரஸ்கள் செயல்பாடு எப்படி உள்ளது என ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டவர்களிடம் எடுக்கப்பட்ட ரத்த மாதிரியில், நோய எதிர்ப்பு திறனை டெல்டா வேரியன்ட் முழுவதுமாக அழித்து விடுவது தெரிந்தது.

மேலும் ஒரு டோஸ் செலுத்தியவர்களுக்கு சிறிது நோய் எதிர்ப்பு திறன் கிடைத்தாலும், இரு டோஸ்கள் செலுத்துவது அவசியம் என ஆய்வு முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.