7 மாத குழந்தையை கொடூரமாக அடித்து துன்புறுத்திய தாய்... வைரல் வீடியோ

7 மாத குழந்தையை கொடூரமாக அடித்து துன்புறுத்திய தாய்...  வைரல் வீடியோ

நாக்பூரில் பச்சிளம் குழந்தையை இரக்கமின்றி தாய் அடித்து துன்புறுத்திய வீடியோ வைரலானதை அடுத்து, போலீசார் குழந்தையை பத்திரமாக மீட்டனர்.

மகராஷ்டிரா மாநிலம் நாக்பூரில், கடந்த 24ம் தேதி, வீட்டில் ஏற்பட்ட குடும்ப தகராறு காரணமாக இளம்பெண் தனது 7 மாத குழந்தையை இரக்கமின்றி சரமாரியாக அடித்துள்ளார்.

அதனை தட்டிக்கேட்ட உறவினரையும் அவர் கண்டுகொள்ளாமல் இருந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த உறவினர், பச்சிளம் குழந்தையை தாயே அடித்து துன்புறுத்தும் வீடியோவை பதிவு செய்து இணையத்தில் பரவவிட்டுள்ளார்.

இது அதிர்வலையை ஏற்படுத்தியதை தொடர்ந்து, சம்பந்தப்பட்ட பகுதி காவல்துறையினர் தாமாக முன்வந்து அந்த குழந்தையை மீட்டுள்ளனர். மேலும் குழந்தையின் தாயிடமும் இதுகுறித்து விசாரணை நடத்தி, பின்னர் எச்சரித்து குழந்தையை தாயுடன் அனுப்பி வைத்துள்ளனர்.