சென்னையில் இருந்து சபரிமலைக்கு செல்ல சிறப்பு பேருந்துகள்...

சபரிமலை செல்வோரின் வசதிக்காக சென்னை - பம்பை இடையே நவம்பர் 17ம் தேதி முதல் விரைவு பேருந்துகள் இயக்கப்படுவதாக போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது.

சென்னையில் இருந்து சபரிமலைக்கு செல்ல சிறப்பு பேருந்துகள்...

சென்னை : சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு தரிசனத்தை காண தமிழகத்தில் இருந்து ஏராளமானோர் செல்வது வழக்கம். அவர்களின் வசதி கருதி சென்னையில் இருந்து பம்பைக்கு நவம்பர் 17ம் தேதி முதல் விரைவு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. 

மேலும் படிக்க | 40 மணி நேரம் இலவச தரிசனத்திற்காக காத்திருந்த பக்தர் கூட்டம்...

அதன்படி, சென்னையில் இருந்து பம்பைக்கு பிற்பகல் 3.30 மணி மற்றும் 4 மணி என இரு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. இதில் பெரியவர்களுக்கு ரூ.1090, சிறியவர்களுக்கு ரூ.545 கட்டணம் வசூலிக்கப்படவுள்ளது. இந்த அதிநவீன மிதவை சொகுசு பேருந்து சேவை வரும் ஜனவரி 18ம் தேதி வரை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. 

மேலும் படிக்க | தீபாவளி சிறப்பு பேருந்து மூலம் ரூ.9கோடி வருமானம்.. சென்னை திரும்ப 13,150 பேருந்துகள் இயக்கம்..!

பேருந்துகளின் இருக்கைகளை,  www.tnstc.in என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம். இதே போல், சென்னையில் இருந்து குமுளிக்கு மாலை 5.30 மணிக்கு வழக்கமாக இயக்கப்படும் பேருந்தையும் பக்தர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதில் பெரியவர்களுக்கு ரூ.575, சிறியவர்களுக்கு ரூ.288 கட்டணம் வசூலிக்கப்படவுள்ளது.

மேலும் படிக்க | வண்டலூர் அருகே 400 கோடி ரூபாயில் புதிய பேருந்து நிலையம் திறக்கப்படும் - வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி அறிவிப்பு