பாகிஸ்தான் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டம்... மத்திய உளவுத்துறை எச்சரிக்கை...

ஜம்மு- காஷ்மீரில் பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதால், பாதுகாப்புப் படையினர் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். 

பாகிஸ்தான் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டம்... மத்திய உளவுத்துறை எச்சரிக்கை...

இந்தியாவின், 75வது சுதந்திர தின விழா வரும் ஞாயிற்றுக் கிழமையன்று கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், பாகிஸ்தானைச் சேர்ந்த லஷ்கர் - இ - தொய்பா, ஜெய்ஷ் - இ - முகமது உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புகள் மிகப்பெரிய அளவில் பயங்கரவாத செயலை நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

மத்திய உளவுத்துறை எச்சரிக்கையை அடுத்து, போலீஸ் மற்றும் பாதுகாப்புப் படையினர் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். ஜம்மு - காஷ்மீர் பகுதியில் தேடுதல் வேட்டை முடுக்கி விடப்பட்டுள்ளது. இரு நாட்களுக்கு முன், ஹிஸ்புல் முஜாஹிதீன் இயக்கத்தைச் சேர்ந்த இரண்டு பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டனர்.

ஜம்மு - காஷ்மீர் பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இதனிடையே இந்திய எல்லைப் பகுதியான ரஜவுரி மாவட்டத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகளை டி.ஜி.பி., தில்பக் சிங் ஆய்வு செய்தார்.