உடம்பில் டிரஸ்சே இல்லாமல் படுத்திருக்கும் நோயாளிகள்... ஒடிசாவில் நேர்ந்த அவலம்

உடம்பில் டிரஸ்சே இல்லாமல் படுத்திருக்கும் நோயாளிகள்... ஒடிசாவில் நேர்ந்த அவலம்

ஒடிசா மாநிலத்தில் உள்ள மருத்துவமனை ஒன்றில் கொரோனா நோயாளிகள் உடம்பில் ஆடையின்றி படுத்திருக்கும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புவனேஸ்வரில் அமைந்துள்ள கலிங்க மருத்துவ அறிவியல் கழக மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இங்கு ஆண், பெண் என இருபாலரும் கொரோனா சிகிச்சையை பெற்று வருகின்றனர். இந்த நிலையில், கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வந்த நோயாளிகள் நிர்வாணமாக கிடக்கும் வீடியோவும் புகைப்படங்களும் வெளியாகி பெரும் சர்ச்சையினை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் இதுதொடர்பாக மருத்துவமனைக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்ட மயூர் பஞ்ச் ஆட்சியர் வினீத் பரத்வாஜ், வீடியோவில் இருக்கும் தகவல் தவறானது என விளக்கமளித்தார். எனினும் இந்த வீடியோ குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.