போராட்டக்காரர்கள் மீது போலீசார் துப்பாக்கி சூடு - இருவர் பலி

அசாமில் போராட்டம் நடத்தியவர்கள் மீது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

போராட்டக்காரர்கள் மீது போலீசார் துப்பாக்கி சூடு - இருவர் பலி

அசாமில் போராட்டம் நடத்தியவர்கள் மீது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

அசாமின் தர்ரங் மாவட்டத்தில் அரசு நிலத்தை ஆக்கிரமித்து குடியிருப்பு அமைத்திருந்த   800க்கும் மேற்பட்ட குடும்பத்தினரை வெளியேற்றும் நடவடிக்கையில் நேற்று போலீசார் ஈடுபட்டனர். அப்போது ஆக்கிரமிப்பாளர்கள் போலீசாரின் நடவடிக்கைக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், போலீசார் மீது தாக்குதல் நடத்த தொடங்கினர். இதனால் இரு தரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. நிலைமை கட்டுக்கடங்காமல் போனதை தொடர்ந்து, போராட்டகாரர்களை கலைக்கும் நோக்கில் போலீசார் துப்பாக்கிசூடு நடத்தினர்.

இதில் 2 பேர் உயிரிழந்துள்ள நிலையில் போலீசார் தரப்பில் 9 பேர் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனிடையே அரசு புகைப்படக்காரர் ஒருவர் போராட்டம் நடத்தியவர் மீது ஏறி மிதிக்கும் வீடியோ காட்சி இணையத்தில் வைரலானதை அடுத்து, புகைப்படகாரர் கைது செய்யப்பட்டுள்ளார்.