பிரதமரை யூடியூப்-பில் தரக்குறைவாக விமர்சித்த அரசியல் பிரமுகர் கைது.!!

பிரதமரை யூடியூப் சேனலில் தரக்குறைவாக விமர்சித்த அரசியல் பிரமுகரை கைது செய்து உத்தரப் பிரதேச போலீசார்  தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

பிரதமரை யூடியூப்-பில் தரக்குறைவாக விமர்சித்த அரசியல் பிரமுகர் கைது.!!

பிரதமர் மோடியை விமர்சனம் செய்து இணையதள வலைதளத்தில் தவறாக பதிவிட்டு பலரின்  மன சஞ்சலத்தை ஏற்படுத்தியதால்  உத்தரப்பிரதேசத்தில்  உள்ள கொட்வாளி காவல் நிலையத்தில் இதுகுறித்து பலர் புகார் அளித்தனர்.

இந்த புகாரின் பேரில் போலீசார் சமூக வலைதளத்தில் தவறாக பதிவிட்ட நபரை தேடிவந்தனர். இந்நிலையில் தேடிய நபர் சென்னை மாதவரத்தில் வசிப்பதை அறிந்த போலீசார் நேற்று வீட்டிலிருந்த அவரை கைது செய்தனர்.

மாதவரம் வி ஆர் டி நகர் 2வது மெயின் ரோட்டை சேர்ந்தவர் மன்மோகன் மிஸ்ரா என்பவரை கைது செய்து மாதவரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி உத்தரப்பிரதேச மாநிலம் ஜான்பூர் கொட்வாலி காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு அழைத்துச் சென்றனர்.