ஹவானா நோய்க்குறி பரவல்... அலட்சியப்படுத்தியதாக அதிகாரி நீக்கம்...
அமெரிக்காவின் உளவுத்துறை அதிகாரிகளிடையே ஹவானா நோய்க்குறி பரவி வருவதை அலட்சியப்படுத்தியதற்காக ஆஸ்திரிய உளவு நிலைய தலைமை அதிகாரி நீக்கப்பட்டுள்ளார்.
ஹவானா நோய்க்குறி என்னும் மர்ம நோய் வியட்நாமில் அதி தீவிரமாக பரவ தொடங்கியுள்ளது. சமீபத்தில் இந்தியா வந்த அமெரிக்கா உளவு அதிகாரி ஒருவருக்கும் ஹவானா நோய்க்குறி பாதித்திருப்பது கண்டறியப்பட்டது.
இந்த நிலையில், அமெரிக்க உளவு அமைப்பான சிஐஏ-வின் ஆஸ்திரிய நிலையத்தில் பணியாற்றும் தூதரக ஊழியர்கள், மத்திய உளவுத்துறை அதிகாரிகள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் ஏராளமானோருக்கு ஹவானா நோய்க்குறி பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஆனால் நோய் பரவல் குறித்து எந்த வித நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியப்படுத்தியதற்காக ஆஸ்திரிய உளவு நிலைய தலைமை அதிகாரி பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இதனிடையே, இந்தியாவில் ஹவானா நோய்க்குறி பரவல் தென்படவில்லை என மத்திய அரசு அறிவித்துள்ளது.