அனைத்து கட்சிகளின் அவைத் தலைவர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை

நாடாளுமன்றத்தின் அனைத்துக் கட்சிகளின் அவைத் தலைவர்களுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை நடத்துகிறார். 

அனைத்து கட்சிகளின் அவைத் தலைவர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை
நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் துவங்குவதற்கு முன்னர், பிரதமர் நரேந்திர மோடி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், நாடாளுமன்ற அனைத்து கட்சிகளின் அவைத் தலைவர்கள் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்தார். மேலும் இந்தக் கூட்டத்தில் கொரோனாவைக் கையாண்ட விதம் மற்றும் தடுப்பூசி செலுத்தும் திட்டம் குறித்து விவாதிக்க தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார். 
பெகாசஸ் விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், இன்று நடைபெறும் அவைத் தலைவர்கள் கூட்டத்தில் இதுகுறித்து விவாதிக்கப்படலாம் எனத் தெரிகிறது.   இந்நிலையில் இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்வது குறித்து ஆலோசனை செய்ய அனைத்து எதிர்க்கட்சிகளும் முடிவு செய்துள்ளன.
 
கூட்டத் தொடர் துவங்குவதற்கு முன்பாக ஏற்கனவே அனைத்து கட்சிகளின் அவைத் தலைவர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்திய நிலையில், தற்போது இரண்டாவது முறையாக மீண்டும் அவைத் தலைவர்களை சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளார்.