உத்தரபிரதேசத்தில் இலவச கேஸ் சிலிண்டர்களை வழங்குகிறார் பிரதமர் மோடி

உஜ்வாலா திட்டத்தின் கீழ், பிரதமர் மோடி இன்று உத்தரபிரதேசம் மகோபா நகர பயனர்களுக்கு இலவச கேஸ் சிலிண்டர்களை வழங்குகிறார்.

உத்தரபிரதேசத்தில் இலவச கேஸ் சிலிண்டர்களை வழங்குகிறார் பிரதமர் மோடி

வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள பெண்களுக்கு உதவும் வகையில் 2016ம் ஆண்டு இலவச சமையல் எரிவாயு இணைப்பு வழங்கும் உஜ்வாலா  திட்டத்தை பிரதமர் மோடி அறிமுகம் செய்தார்.

இந்த திட்டத்தின் கீழ், 8கோடி  பயனாளிகளுக்கு முதல் சிலிண்டர் இலவசமாக வழங்கப்படுவதோடு, மானிய விலையில், அடுப்பு வழங்கப்பட்டது.  

இந்த நிலையில் இன்று உஜ்வாலா 2.0 என்கிற புதிய திட்டத்தை பிரதமர் மோடி உத்தரபிரதேசத்தில் உள்ள மகோபா நகரில் தொடக்கி வைக்கிறார்.

இத்திட்டத்தில் பயனாளிகளுக்கு இலவச சிலிண்டர் வழங்கப்படுவதுடன், அவை தீர்ந்தவுடன்  ஒருமுறை விலையில்லாமல் நிரப்பித் தரப்படும். மேலும் சிலிண்டருக்கு பதிவு செய்வதற்கான நடைமுறைகள் சுலபமாக்கப்படுவதுடன், புலம்பெயர் தொழிலாளர்கள் எளிதாக சிலிண்டர்கள் பெறுவதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது.