டிராக்டரில் வந்த ராகுல் காந்தி... விசாரணை நடத்த முடிவு...

ராகுல்காந்தி நாடாளுமன்றத்திற்கு டிராக்டரில் வந்த விவகாரம் தொடர்பாக, துறைரீதியான விசாரணைக்கு டெல்லி காவல்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

டிராக்டரில் வந்த ராகுல் காந்தி... விசாரணை நடத்த முடிவு...
மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, டிராக்டரில் ஊர்வலமாக நாடளுமன்றத்திற்கு வந்தார். அவருடன் அக்கட்சியைச் சேர்ந்த எம்பிக்களும் டிராக்டரில் வருகை தந்தனர். 
 
இந்நிலையில் நாடாளுமன்றம் அமைந்துள்ள மத்திய டெல்லி பகுதியில், டிராக்டர்கள் நுழைய தடைவிதிக்கப்பட்டுள்ள நிலையில்,  அதனை மீறி ராகுல்காந்தி டிராக்டரில் வந்தது குறித்து விசாரணை நடத்த டெல்லி காவல்துறை முடிவு செய்துள்ளது. டிராக்டர் பேரணிக்கு அனுமதி கொடுத்த அதிகாரிகள் யார் என விசாரணை நடத்தவும் காவல்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.