மருத்துவமனைக்குள் புகுந்த மழைநீர்.... நோயாளிகள், மருத்துவர்கள் அவதி

பீகாரில் பெய்த கனமழையால் தர்பங்கா மருத்துவமனைக்குள் வெள்ளம் புகுந்தது.

மருத்துவமனைக்குள் புகுந்த மழைநீர்....  நோயாளிகள், மருத்துவர்கள் அவதி

இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் அதீதிவிரமடைந்த வருகிறது.. முதல் அலையை விட கொரோனாவின் 2வது அலையில் மக்கள் சிக்கி தவித்து வருகின்றனர்.

அதற்கு மத்திய- மாநில அரசுகள் பல்வேறு கட்டுப்பாட்டு விதிகளை அமல்படுத்தி வருகிறது.

கொரோனா ஒரு பக்கம் இருக்க, இயற்கை பேரிடரான  புயல், மழை , வெள்ளம் என மற்றோரு பக்கம் மக்களை வாடி வதைக்கிறது 

பீகாரில் தர்பங்கா மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் கொரோனா நோயாளிகள் ஏராளமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நேற்றிரவு பெய்த கனமழையால் மருத்துவமனையை வெள்ளம் சூழ்ந்தது. மருத்துவமனைக்குள் மழை நீர் புகுந்தது.

நோயாளிகளின் படுக்கைகளுக்கு கீழே நீர் தேங்கியது. இதனால், மருத்துவர்கள், நோயாளிகள், செவிலியர்கள் என அனைவரும் அவதியடைந்தனர்.