இந்தியா-பாகிஸ்தான் இடையே மீண்டும் தொடக்கம்... 

அட்டாரி-வாகா எல்லையில் இந்தியா-பாகிஸ்தான் இடையிலான கூட்டு அணிவகுப்பு நிகழ்ச்சி மீண்டும் தொடங்கியுள்ளது.

இந்தியா-பாகிஸ்தான் இடையே மீண்டும் தொடக்கம்... 

பஞ்சாபின் அமிர்தசரஸில் இருந்து பாகிஸ்தானின் லாகூர் செல்லும் கிராண்ட் டிரங்க் சாலையில் வாகா எல்லை உள்ளது. அட்டாரி எனும் இடத்தில் உள்ள வாகா எல்லையில், நாள்தோறும் சூரிய அஸ்தமனத்தின்போது கொடி இறக்க நிகழ்ச்சி நடைபெறும்.

அப்போது, அவரவர் எல்லைகளில் இரு நாடுகளின் வீரர்களும் ஒரே நேரத்தில் அணிவகுப்பு நடத்துவர். ஆனால் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக, கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் அணிவகுப்பு நிகழ்ச்சி நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

தற்போது குறைந்த அளவிலான பார்வையாளர்களுடன் கூட்டு அணிவகுப்பு நிகழ்ச்சி மீண்டும் தொடங்கியுள்ளது. இதில் இந்தியாவின்  பி.எஸ்.எஃப். மற்றும் பாகிஸ்தானின் ரேஞ்சர் படை வீரர்கள் பங்கேற்றனர்.