இன்னைக்கு ஸ்கூல் திறக்குதுப்பா.... பசங்களே படிக்க ஆரம்பிங்க....

இன்னைக்கு ஸ்கூல் திறக்குதுப்பா....  பசங்களே படிக்க ஆரம்பிங்க....

கேரளாவில் நாளை முதல் 2021-2022-ம் ஆண்டுக்கான கல்வியாண்டு தொடங்கவுள்ளதால் மாணவர்கள் அதற்கு தயாராகி வருகின்றனர். 

கேரள மாநிலத்தில் கொரோனாவின் முதல் மற்றும் இரண்டாம் அலை அதி தீவிரமாக பரவியதை அடுத்து, பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் மட்டுமே வகுப்புகளை எடுக்க வேண்டும் அம்மாநில அரசு தெரிவித்தது.

இந்த நிலையில், இன்று முதல் நடப்பு கல்வியாண்டு தொடங்கவுள்ளதால் 1 முதல் 12 வரையிலான வகுப்புகள் இன்று முதல் தொடங்குகிறது. இதையொட்டி திருவனந்தபுரத்தில் உள்ள காட்டன் ஹில் அரசு மகளிர் பள்ளியில் நடப்பாண்டுக்கான முதல் வகுப்பை இன்று கேரள முதல்வர் பினராயி விஜயன் தொடங்கி வைக்கிறார். .

இதேபோன்று  ஆன்லைன் கல்லூரி வகுப்புகளும் இன்று முதல் தொடங்குவதாக மாநில அரசு தெரிவித்துள்ளது.