லஷ்கர் ஈ தொய்பா அமைப்பின் முக்கிய தீவிரவாதி கைது... பாதுகாப்பு படை நடவடிக்கை...

ஜம்மு- காஷ்மீரில் ராணுவ வீரர்களின் தொடர் உயிரிழப்புக்கு முக்கிய காரணமான லஷ்கர் ஈ தொய்பா அமைப்பை சேர்ந்த முக்கிய தீவிரவாதியை பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

லஷ்கர் ஈ தொய்பா அமைப்பின் முக்கிய தீவிரவாதி கைது... பாதுகாப்பு படை நடவடிக்கை...

ஜம்மு- காஷ்மீரில் தீவிரவாதிகள் களையெடுப்பு பணியின்போது ராணுவ வீரர்கள் பலர் வீரமரணம் அடைந்துள்ளனர். இந்தநிலையில் ராணுவ வீரர்கள் மீதான தாக்குதலுக்கு முக்கிய காரணமான லஷ்கர் ஈ தொய்பா அமைப்பை சேர்ந்த உமர் முஸ்தாக் காண்டே என்ற முக்கிய தீவிரவாதி புல்வாமா மாவட்டத்தில் பாம்போரின் திரங்பால் என்னும் பகுதியில் பதுங்கியிருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து அப்பகுதியை பாதுகாப்பு படையினர் சுற்றி வளைக்க இருதரப்பினருக்கும் இடையே கடுமையான மோதல் ஏற்பட்டது. மோதல் நீடித்து வருவதால் அப்பகுதிக்கு கூடுதல்படை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.