பட்டாசு வியாபாரி வீட்டில் வெடி விபத்து... 6 பேர் உயிரிழப்பு- படுகாயங்களுடன் 8 பேர் மீட்பு!!

பீகார் மாநிலத்தில் வியாபாரி வீட்டில் நிகழ்ந்த பட்டாசு வெடி விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர். 8 பேர் காயமடைந்தனர்.

பட்டாசு வியாபாரி வீட்டில் வெடி விபத்து... 6 பேர் உயிரிழப்பு-  படுகாயங்களுடன் 8 பேர் மீட்பு!!

பட்டாசு வியாபாரி வீட்டில் வெடி விபத்து:

சரண் மாவட்டம் குடாய் பாக் கிராமத்தில் ஷபீர் உசேன் என்ற பட்டாசு வியாபாரியின் வீட்டில் பட்டாசு தயாரிக்கும் பணி நடைபெற்று வந்துள்ளது. அப்போது திடீரென பட்டாசுகள் வெடிக்கத் தொடங்கியது. சுமார் 1 மணி நேரம் நீடித்த பட்டாசு வெடிப்பில் வீட்டின் ஒரு பகுதியே வெடித்துச் சிதறியது. இந்த விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர்.

காவல்துறையினர் விசாரணை:

தகவல் அறிந்து வந்த தீயணைப்புத்துறையினர் இடிபாடுகளில் சிக்கியிருந்த 8 பேரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும் யாரும் சிக்கியுள்ளனரா என்றும் தேடி வரும் நிலையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை மேலும் உயர வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. வெடி விபத்துக்கான காரணம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.