தமிழக மீனவர்கள் கடல் வளத்தை அழித்து வருவதாக இலங்கை மீனவர்கள் குற்றச்சாட்டு!
தமிழக படகுகளை இலங்கை அரசு ஏலம் விடுவதை யாழ் மாவட்டத்தின் கடற்தொழிலாளர் கூட்டறவு சங்க தலைவர் வரவேற்று உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

எல்லையை தாண்டி மீன் பிடித்த குற்றத்திற்காக தமிழகத்தை சேர்ந்த மீனவர்களின் 105 விசைப்படகுகளை பறிமுதல் செய்து அதனை இலங்கை கடற்படையினர் முகாம்களில் நிறுத்தி வைத்துள்ளதாக சொல்லப்படுகிறது.
இதனை தொடர்ந்து கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்த தமிழகத்தை சேர்ந்த விசைப்படகுகளை வருகிற பிப்ரவரி மாதம் ஏலம் விடப்போவதாக இலங்கை அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது.
இதையடுத்து இலங்கை யாழ் மாவட்ட கடற்தொழிலாளர் கூட்டறவு சங்கங்களில் சம்மேளான தலைவர் அன்னலிங்கம் அன்னராசா மற்றும் இலங்கை மீனவர்கள் தமிழக மீனவர்களின் படகுகளை ஏலத்தில் விடுவதை வரவேற்பதாகவும் தெரிவித்துள்ளனர். மேலும் தமிழக மீனவர்கள் எல்லையை தாண்டி வலையை கொண்டு மீன்பிடித்தலில் ஈடுபட்டு வருவதால் கடல் வளத்தினை அழித்து வருவதாக இலங்கை மீனவர்கள் தமிழக மீனவர்கள் மீது குற்றஞ்சாட்டி வருகின்றனர்.