சிபிஎஸ்இ +2 தேர்வினை மாணவர்கள் ஆகஸ்டில் எழுதலாம்..!! அமைச்சர் ரமேஷ் பொக்ரியால்

சிபிஎஸ்இ +2 தேர்வினை மாணவர்கள் ஆகஸ்ட் மாதத்தில் எழுதிக்கொள்ளலாம் என மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார்.

சிபிஎஸ்இ +2 தேர்வினை மாணவர்கள் ஆகஸ்டில் எழுதலாம்..!! அமைச்சர் ரமேஷ் பொக்ரியால்

சிபிஎஸ்இ +2 தேர்வினை மாணவர்கள் ஆகஸ்ட் மாதத்தில் எழுதிக்கொள்ளலாம் என மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார்.

கொரோனா 2வது அலை பரவியபோது, மாணவர்களின் நலன் கருதி +2 மாணவர்களுக்கான தேர்வு ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து அந்த மாணவர்களுக்கு 10,11 மற்றும் 12ம் வகுப்பு இடைத்தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் இந்த மாதம் தேர்வு முடிவு வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் தேர்வு முடிவில் திருப்தி பெறாத மாணவர்கள் ஆகஸ்ட் மாதம்  நடத்தவுள்ள தேர்வில் பங்கேற்கலாம் என மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார். ஆஃப்லைன் தேர்வுக்கான அனைத்து முயற்சிகளும் நடந்து வருவதாக அவர் கூறியுள்ளார்.