10 வயது மாணவியை வகுப்பில் வைத்து உடை கழட்ட சொன்ன அவலம்!

அழுக்காக இருந்ததால், 10 வயது மாணவியை, வகுப்பில் வைத்தே தனது சீருடையை அகற்ற சொன்ன சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

10 வயது மாணவியை வகுப்பில் வைத்து உடை கழட்ட சொன்ன அவலம்!

மத்திய பிரதேசத்தில், ஐந்தாம் வகுப்பு படித்து வரும் பழங்குடி மாணவி ஒருவரை, அழுக்கான சீருடையை வகுப்பில் வைத்தே கழற்ற சொல்லி மிரட்டிய ஆசிரியர் மீது கடும் எதிர்ப்பு மக்கள் மத்தியில் கிளம்பியுள்ளது.

ஒரு போட்டோ தற்போது சமூக வலைத்தளங்களில் படு வைரலாகி வருகிறது. அதில், ஒரு ஆசிரியர், 5ம் வகுப்பு மாணவிகள் சூழ, ஒரு பழங்குடியின மாணவி மட்டும், தனது உள்ளாடைகளுடன் நிற்கிறார். அந்த மாணவியின் சீருடைகளை துவைத்துக் கொண்டிருந்தார் அந்த ஆசிரியர். இது சோசியல் மீடியாக்களில் பலரது எதிர்கருத்துகளை சந்தித்தது.

மேலும் படிக்க | கன்னியாகுமரியில் இருந்து வந்த மருத்துவ அழகி!

தன்னைத் தானே, “ஸ்வச்சத்தா மித்ரா” அதாவது, சுத்தப்படுத்தும் நபராக அடையாளம் கண்டுகொள்ளும் ஷ்ரவன் குமார் திரிபாதி என்ற ஆசிரியர், தனது 10 வயது மாணவி, அழுக்கான சீருடையில் வந்ததைப் பார்த்து கோபமடைந்ததாகக் கூறப்படுகிறது.

அதனால், வகுப்பிலேயே, சக மாணவிகள் மத்தியில், அந்த பழங்குடியின மாணவியை உடை அகற்ற சொல்லி, அதனை துவைத்து, காய்ந்த பிறகு அணிந்து கொள்ள கூறியிருக்கிரார். ஆனால், சுமார் 2 மணி நேரம் வரை, அந்த மாணவி உடை இன்றியே வகுப்புகளில் இருந்திருக்கிறார் எனத் தகவல்கள் கூறுகின்றன.

மேலும் படிக்க | மாணவியின் உடலுறுப்புகள் தானம் செய்த பெற்றோர்!

இதனை அறிந்த நெட்டிசன்கள் கொந்தளித்து, பெரும் சர்ச்சையாக்கியதால், அந்த ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஷாதோல் மாவட்டம், பாரா காலா கிராமத்தில், கடந்த வெள்ளிக் கிழமை நடந்த இந்த சம்பவம் பெரும் கொந்தளிப்பை கிளப்பியுள்ளது. தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்ட நிலையில், அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த இருப்பதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

மேலும் படிக்க | தனியார் பள்ளி வாகனத்தின் கதவு உடைந்து விபத்து..!